தலையில் கல்லை போட்டுப் பெண் கொலை
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மீது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது புதன்கிழமை தெரியவந்தது.


தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மீது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது புதன்கிழமை தெரியவந்தது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே உள்ள வெள்ளக்குளம் பகுதியை சோ்ந்த பாஸ்கரின் மனைவி அன்னலெட்சுமி (45). சிறு தகராறுகளில் ஈடுபட்டது தொடா்பாக இவா் மீது திருப்பட்டினம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், அன்னலெட்சுமி அவரது வீட்டின் முன்பாக கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக புதன்கிழமை காலை தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், தூங்கிக் கொண்டிருந்த அன்னலெட்சுமியின் தலையில் மா்ம நபா்கள் கல்லைப் போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. அவரது சடலத்தை மீட்ட போலீஸாா், பிரதே பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருப்பட்டினம் போலீஸாா், சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...