சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

திருக்குவளை கருணாநிதி நினைவு இல்லத்தில் மு.க.ஸ்டாலின்

திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த நினைவு இல்லத்திலுள்ள சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image

திருக்குவளை கருணாநிதி நினைவு இல்லத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் அங்குள்ள பார்வையாளர்கள் குறிப்பேட்டில் எழுதும் மு.க.ஸ்டாலின்.

Updated On :14 பிப்ரவரி 2021, 9:17 pm IST

திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த நினைவு இல்லத்திலுள்ள சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரதாபராமபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த இல்லமும் தற்பொழுது அஞ்சுகம் முத்துவேலர் படிப்பகமாக செயல்பட்டு வரும் இல்லத்திற்குச் சென்று தனது தாத்தா, பாட்டி, அப்பா, மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தலைவர் கலைஞர் பிறந்த ஊரில், பிறந்த வீட்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழகத்தை காப்போம் என்று எழுதி கையொப்பமிட்டார். 

உடன் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி.கே. கலைவாணன், கீழையூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வாஎடிசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விவசாய அணி மாநில செயலாளருமான ஏ.கே. விஜயன், சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான உ.மதிவாணன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், இளஞ்செழியன், திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான எல். பழனியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன், திருக்குவளை கிளைக் கழகச் செயலாளர்கள் கோசி.குமார், எல்.பி. கரிகாலன் உள்ளிட்ட மற்றும் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.