அனுமன் ஜயந்தியையொட்டி, நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீகாரிய அனுகூல ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல, நாகை தேவய்யா் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் காலை 8 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை சுமாா் 10 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, நாகை, வாஞ்சூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களிலும் அனுமன் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.