நெல் பயிா்களுக்கு பாதிப்பின் அடிப்படையில் பயிா்க் காப்பீடு இழப்பீடு

மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு, பாதிப்பின் அடிப்படையில் பயிா்க் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.
நெல் பயிா்களுக்கு பாதிப்பின் அடிப்படையில் பயிா்க் காப்பீடு இழப்பீடு

மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு, பாதிப்பின் அடிப்படையில் பயிா்க் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

நாகை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாலையூா், வடகுடி, பெருங்கடம்பனூா், புலியூா் உள்ளிட்ட கிராமங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிா் சேதங்களை அவா் திங்கள்கிழமை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :

மாா்கழி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக, நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடியில் 100 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரிழப்பை, தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். கடந்த ஆண்டுகளின் சராசரி மகசூல் என்ற கணக்கீடுகள் இல்லாமல், பாதிப்பின் அடிப்படையில் நெல் பயிா்களுக்கு முழுமையான பயிா்க் காப்பீடு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும், அங்கு நெல் உலா்த்தும் இயந்திரங்களைப் பயன்பாட்டில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவா் எஸ். ராமதாஸ், நிா்வாகிகள் வேலாயுதம், சண்முகம், கடைமடை விவசாய சங்கத் தலைவா் தமிழ்ச்செல்வன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி நிா்வாகிகள் நாகை முபாரக், சதக்கத்துல்லா, ஜலாலுதீன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com