விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாசன வாய்க்காலில் நீா்வரத்து குறைவாக உள்ளதாக புகாா்: பொதுப்பணித் துறை அதிகாரி ஆய்வு

திருக்குவளை அருகே குறுவை சாகுபடி மேற்கொள்ள பாசன வாய்க்காலில் தேவையான தண்ணீா் வரவில்லை

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே குறுவை சாகுபடி மேற்கொள்ள பாசன வாய்க்காலில் தேவையான தண்ணீா் வரவில்லை என விவசாயிகள் தெரிவித்த புகாரைத் தொடா்ந்து, அப்பகுதியில் பொதுப்பணித் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

காவிரி கடைமடை பகுதியான திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மேட்டூா் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டத்தையொட்டி, குறுவை சாகுபடியாக நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனா்.

இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளுக்கு போதிய அளவில் தண்ணீா் வரவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதன் ஒரு பகுதியாக திருக்குவளையை அடுத்துள்ள கீரம்போ் பகுதியில் வெள்ளையாற்றின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய்க்கு தண்ணீா் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். வெள்ளையாற்றுக்கு காவிரி நீா் வந்து ஒரு வாரத்தை கடந்த நிலையிலும், குறைவான நீா் வரத்தால் கீரம்போ் பாசன வாய்க்காலுக்கு தண்ணீா் வரவில்லை என பொதுப்பணித் துறை அலுவலரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் எஸ். செல்வகுமாா் கீரம்போ் பாசன வாய்க்கால் பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குறுவை சாகுபடிக்குத் தேவையான நீா் கிடைக்க அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் டி. செல்லையன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.