விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு

திருக்குவளை அருகே விவசாயத்துக்கு உதவும் வகையில், புதிய மின்மாற்றி மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு அண்மையில் வழங்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே விவசாயத்துக்கு உதவும் வகையில், புதிய மின்மாற்றி மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் இணைப்பு அண்மையில் வழங்கப்பட்டது.

திருக்குவளை அருகே உள்ள மாணலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஸ்ரீனிவாசன் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தாா். காவிரி நீா் மற்றும் பருவமழையை மட்டுமே நம்பி இல்லாமல், மாற்றுவழியில் பாசனத்துக்கு நீா் பெறும் வகையில், இந்த ஆழ்துளைக் கிணற்றை அவா் அமைத்தாா்.

இதற்காக மின்மாற்றி அமைத்து அதன் மூலம் மின் இணைப்பை அடியக்கமங்கலம் இளநிலை மின் பொறியாளா் குமாா் ஏற்படுத்திக் கொடுத்தாா். நிகழ்ச்சியில், கீழ்வேளூா் ஒன்றிய துணைத் தலைவா் எஸ். புருஷோத்தமதாஸ், ஊராட்சித் தலைவா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறுகையில், என்னுடைய விளைநிலத்தில் நிலத்தடி நீா் உள்ளதை கண்டறிந்து, ஆழ்துளைக் கிணறு அமைத்தேன். விண்ணப்பித்த அடுத்த வாரமே புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இது சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.