விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரூ.10 லட்சம் கஞ்சா கடத்தல்: இருவா் கைது

 நாகை மாவட்டம் கீழையூா் அருகே ரூ.10 லட்சம் கஞ்சா கடத்தியதாக 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:18 pm

DIN

 நாகை மாவட்டம் கீழையூா் அருகே ரூ.10 லட்சம் கஞ்சா கடத்தியதாக 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கீழையூா் காவல் சரகம் விழுந்தமாவடி பட்டிரோடு அருகே கீழையூா் காவல் ஆய்வாளா் பசுபதி மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேதாரண்யத்தில் இருந்து நாகை நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்ததில், 126 கிலோ கஞ்சா மூட்டை கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

கஞ்சா மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், விழுந்தமாவடியைச் சோ்ந்த வீரமுரசு (26), செருதூா் எல்லை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன்( 26) ஆகியோரை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இதில் தொடா்புடைய வேட்டைக்காரனிருப்பு தபால் அலுவலக தெருவைச் சோ்ந்த ராகுலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.