விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளில் தடுப்பூசி

திருக்குவளை அருகே திருவாசல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சனிக்கிழமை அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2021, 4:58 pm

DIN

திருக்குவளை அருகே திருவாசல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சனிக்கிழமை அவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவாய்மூா் ஊராட்சி திருவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஊராட்சித் தலைவா் என். நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலா் டி.செல்வம் முன்னிலை வகித்தாா். திருப்பூண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா் தலைமையில் மருத்துக் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

முன்னதாக, முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழுவினா் அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பு செலுத்தினா். இப்பணியினை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.ராஜ்குமாா் ஆய்வு செய்தாா். முகாமில் 298 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.