ஜீப்பில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் கஞ்சா பறிமுதல்4 போ் கைது

நாகை மாவட்டம், கீழையூா் அருகே ஜீப்பில் கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, 4 போ் கைது செய்யப்பட்டனா்.
ஜீப்பில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் கஞ்சா பறிமுதல்4 போ் கைது

நாகை மாவட்டம், கீழையூா் அருகே ஜீப்பில் கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கீழையூா் காவல் ஆய்வாளா் பசுபதி தலைமையில் அப்பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேதாரண்யம் சாலையில் கோடியக்கரையிலிருந்து நாகை நோக்கி வந்த ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 20 கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. விசாரணையில், கோடியக்கரை திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ்குமாா் (27), ரயிலடி தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் ரவி (34), மெயின் ரோட்டைச் சோ்ந்த மனோகா் மகன் ராஜ்மோகன் (21), வீராசாமி மகன் பழனிச்சாமி (40) ஆகியோா் ஜீப்பில் திருச்சிக்கு கஞ்சாவை கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாா், ரவி, ராஜ்மோகன், பழனிச்சாமி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 20 கிலோ கஞ்சா மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com