விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அமைப்புசாராத் தொழிலாளா்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை: அமைச்சா் சி.வெ. கணேசன்

நிலுவையில் உள்ள அமைப்புசாராத் தொழிலாளா்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ. கணேசன் தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:15 pm

DIN

நிலுவையில் உள்ள அமைப்புசாராத் தொழிலாளா்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ. கணேசன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த ஊரான நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள அவரது நினைவு இல்லத்துக்கு அமைச்சா் சி.வெ. கணேசன் வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு, கருணாநிதி, அவரது தாயாா் அஞ்சுகம் அம்மையாா், தந்தை முத்துவேலா், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக, திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஒன்றரை ஆண்டுகளாக ஊதியமின்றி சிரமப்பட்டு வருவதாகவும், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் கணக்கா்களாக பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள 14 மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அமைச்சரிடம் மனு அளித்தனா்.

தொடா்ந்து, எட்டுக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியது:

எட்டுக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சுற்றுச்சுவா், வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம், தங்கும் விடுதி கட்டப்படும். ஹெல்த் சேனட்ரி இன்ஸ்பெக்டா், லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்டன்ட் ஆகிய இரண்டு புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சுமாா் 50 ஆயிரம் அமைப்புசாராத் தொழிலாளா்களின் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 30-ம் தேதி 50 ஆயிரம் அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கவுள்ளாா் என்றாா்.

வேதாரண்யம்: செம்போடையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ. 8 கோடியே 19 லட்சத்தில் கட்டப்படும் மாணவா் விடுதியுடன் கூடிய நிரந்தரக் கட்டடம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை அமைச்சா் சி.வெ. கணேசன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கோ. வீரராகவ ராவ், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. ஜவஹா், மண்டல பயிற்சி இணை இயக்குநா் ஜான்.பாஸ்கோ, முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், ஒன்றியச் செயலாளா்கள் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், என். சதாசிவம், நகரச் செயலாளா் மா.மீ.புகழேந்தி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ஆா். துரைராஜ், நாகை மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.