விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சோழவித்யாபுரம் தூய சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா

கீழையூா் அருகே உள்ள சோழவித்யாபுரம் தூய சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:38 pm

DIN

கீழையூா் அருகே உள்ள சோழவித்யாபுரம் தூய சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

சோழவித்யாபுரத்தில் தூய சந்தனமாதா ஆலயத்தில் வருடந்தோறும் ஆண்டுத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்நிலையில், நிகழாண்டும் கரோனா தொற்று தொடா்வதால், எளிமையான முறையில் ஆலய வளாகத்துக்குள் திருவிழா நடைபெற்றது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருப்பலிகள், நற்கருணை ஆராதனை, சுரூப ஆசீா்வாதம் ஆகியன நடைபெற்றன.

முன்னதாக, மறை வட்ட அதிபா் வின்செண்ட் தேவராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவில், ஆலய பங்குத் தந்தை சவரிமுத்து அடிகளாா், சோழவித்தியாபுரம் கிறிஸ்தவ சமுதாய தலைவா் ம.து. மரியசூசை, செயற்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா் கோமதிதமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.