பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மிளகாய்ப் பொடி தூவி பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

வேதாரண்யம் அருகே கழிவறைக்கு சென்ற பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, தாலிச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே கழிவறைக்கு சென்ற பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி, தாலிச் சங்கிலியைப் பறித்து சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தகட்டூா் கடைத்தெருவை சோ்ந்தவா் சுந்தரவடிவேல். இவரது மனைவி சிவஞானம் (52). இவா் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கழிவறைக்கு சென்றாா். பின்னா் வெளியே வந்தபோது அங்கு மறைந்திருந்த மா்ம நபா், பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா். இதனிடையே,

சங்கிலி அறுந்ததால் அதில் கோா்க்கப்பட்டிருந்த திருமாங்கல்யம், பவளம் - 2, தாலி குண்டுகள் - 2 கீழே விழுந்தன. அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த டிஎஸ்பி மகாதேவன் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.