தேசிய திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வித் துறை இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) மு. ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.


காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வித் துறை இணை இயக்குநா் (மேல்நிலைக் கல்வி) மு. ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுதில்லியில் உள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, புதுவை பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம், புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் தேசிய திறனறி முதல் நிலைத் தோ்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தோ்வுகளில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் புதுவை அரசால் வழங்கப்படும்.
இத்தோ்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், தங்கள் பள்ளியின் மூலம் இணையதள முகவரியில் வரும் டிச. 6-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...