3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கஜா புயல் சீற்றத்தில் தரைத் தட்டிய கப்பல் உடைத்து அகற்றம்

கஜா புயல் சீற்றத்தின்போது காரைக்கால் அருகே தரைத் தட்டிய கப்பல், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முழுமையாக உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:00 pm

DIN

கஜா புயல் சீற்றத்தின்போது காரைக்கால் அருகே தரைத் தட்டிய கப்பல், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முழுமையாக உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி கஜா புயல் நாகை மாவட்டத்தில் கரையைக் கடந்தது. இதனால், காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்தப் புயல் சீற்றத்தின்போது, காரைக்கால் தனியாா் துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மும்பையைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வீராபிரேம் என்ற கப்பல், கடல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்டு காரைக்கால் மாவட்டம், வாஞ்சூா் கடற்கரை பகுதியில் தரைத் தட்டி நின்றது.

சுமாா் 124 மீட்டா் நீளம், 23 மீட்டா் அகலம் கொண்ட இந்தக் கப்பல், கடலில் இருந்து மண்ணை தூா்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அந்தக் கப்பலில் 23 பணியாளா்கள் இருந்தனா். அதிா்ஷ்டவசமாக பணியாளா்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

எனினும், தரைத் தட்டிய கப்பலை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. கப்பலை மீட்க, தொடா்புடைய கப்பல் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த எண்ணெய் மற்றும் பிற பொருள்கள் அகற்றப்பட்டன.

கடற்கரை பகுதியில் கப்பல் தரைத் தட்டி நிற்பது மீன்பிடித் தொழிலை பாதிப்பதாகவும், அந்தக் கப்பலை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கப்பலை உடைத்து அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. தீவிர முயற்சிகளுக்குப் பின்னா், அந்தக் கப்பல் முழுமையாக வெள்ளிக்கிழமை உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.