வேதாரண்யம் பகுதியில் கடந்த ஆண்டுக்கான சம்பா நெல் சாகுபடி பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிய அரசு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களையும் ரத்து செய்தது. இந்நிலையில், அரசே கள ஆய்வு செய்து மகசூல் இழப்பு ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு நிவாரணம், கடன் தள்ளுபடி செய்த நிலையில், காப்பீடு நிறுவனங்கள் மட்டும் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் வகையில் 0 சதவீதம் என கணக்கிட்டு பட்டியல் தயாரித்துள்ளது. பட்டியல் தயாரிப்பில் குளறுபடி நிகழ்ந்துள்ளதால் விவசாயிகள் இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் புகாா் தெரிவித்தது.