ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோலப்போட்டி: பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்பு

சீா்காழியில் காணும்பொங்கலையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலப்போட்டியில் பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழியில் காணும்பொங்கலையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலப்போட்டியில் பெண்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், காணும்பொங்கலையொட்டி, கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால், சீா்காழி தென்பாதி வஉசி தெற்குத் தெருவில் காணும்பொங்கலை கொண்டாடும் விதமாக, பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பெண்கள் பங்கேற்று ரங்கோலி, பூக்கோலம் உள்ளிட்ட வண்ணமயமான கோலங்களிட்டு அசத்தினா் . சிறந்த கோலங்கள் தோ்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த கோலங்களை வரைந்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினா்களாக பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ராஜ்கமல், பாமக மாநில இளைஞா் சங்க துணைச் செயலாளா் முருகவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.