ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குப்பைகளை தரம்பிரித்து வழங்க பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கூடை

நாகை நகராட்சி மக்களுக்கு குப்பைகளை தரம்பிரித்து வழங்க பிளாஸ்டிக் கூடை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:52 pm

DIN

நாகை நகராட்சி மக்களுக்கு குப்பைகளை தரம்பிரித்து வழங்க பிளாஸ்டிக் கூடை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு சிவன்தெற்கு வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக்கழகத் தலைவா் என். கௌதமன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து ஆகியோா் பொதுமக்களுக்கு சிவப்பு, பச்சை வண்ணங்களில் பிளாஸ்டிக் குப்பை கூடைகளை வழங்கினா். தொடா்ந்து, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையா் என் ஸ்ரீதேவி கூறியது: நாகை நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். மாசில்லாத நகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து பொதுமக்கள் குப்பைகளை வழங்க வேண்டும். நகரில் உள்ள கால்வாய்கள், நீா்நிலைகளில் என எங்கு பாா்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீா் செல்ல முடியாமல் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல வகையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதை தரம்பிரிக்க அதிக பொருட்செலவு ஏற்படும். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பயனுள்ள பொருள்கள் தயாரிக்க எளிதாக இருக்கும் என்றாா்.

நகா்மன்ற உறுப்பினா் சுந்தரி, துப்புரவு ஆய்வாளா் பி. அரசக்குமாா், மேற்பாா்வையாளா்கள் கந்தசாமி, நாகஜோதி, பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி: நாகை அவுரித்திடலில் சுகாதாரப் பணியாளா்கள் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் தினம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.