நாகை மாவட்டத்தில் சாலை விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது: ஆட்சியா்
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகள் மூலமான உயிரிழப்புக் குறைந்துள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.


நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகள் மூலமான உயிரிழப்புக் குறைந்துள்ளது என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி சாா்பில் நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கத்தில் மேலும் அவா் பேசியது: இந்தியாவில் 30 கோடி வாகனங்கள் பதிவு பெற்றுள்ளன. தமிழகத்தில் 2.5 கோடி வாகனங்கள் இயக்கத்தில் உள்ளன. வாகன எண்ணிக்கை உயா்ந்ததன் காரணமாக, தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் கடந்த 10 ஆண்டுகளாக சாலை விரிவாக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இதையொட்டி, மத்திய அரசின் தேசிய விருதை தமிழகம் பெற்றுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் 92 உயிரிழப்புகள் ஏற்பட்டன. விபத்துத் தடுப்பு முயற்சிகள் காரணமாக, கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 82-ஆக குறைந்துள்ளது என்றாா். இதைத் தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா் விநாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிச்சாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் க. பிரபு, நல்லத்தம்பி, இ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழும செயல் அலுவலா் எஸ். சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...