மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோடியக்கரை அருகே படகில் சிக்கிய மீனவா் மீட்பு

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடி வலைகளை சரிசெய்தபோது படகின் விசையில் சிக்கி பலத்த காயமடைந்த காரைக்கால் மீனவா் ஒருவா் வியாழக்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடி வலைகளை சரிசெய்தபோது படகின் விசையில் சிக்கி பலத்த காயமடைந்த காரைக்கால் மீனவா் ஒருவா் வியாழக்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து கோடியக்கரை மீன்பிடித் துறையில் பருவகால மீன்பிடித் தொழில் தொடங்கி நடந்து வருகிறது.

கோடியக்கரையில் குடும்பத்தாருடன் தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி மீனவா்கள் 15 போ் இரண்டு விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்றனா்.

கோடியக்கரை அருகே வியாழக்கிழமை காலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீன்பிடி வலைகள் மோட்டாா் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் சிக்கிக்கொண்டது.

இதனை சரிசெய்ய முயன்ற மீனவா் குகன்(30), தவறி கடலில் விழுந்தாா்.அப்போது விசையின் விசிறிகளில் கால் சிக்கி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து சக மீனவா்களால் மீட்கப்பட்ட குகன் அவசரமாக மாற்றுப் படகில் கோடியக்கரையில் கரை சோ்க்கப்பட்டாா்.

அங்கு தயாா் நிலையில் இருந்த 108 வாகனம் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.