இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்து விளக்கம்

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில், பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்த புரிதல் ஏற்படுத்தும் வகையில் இலக்கு எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்து விளக்கம்

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தில், பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மேற்படிப்பு குறித்த புரிதல் ஏற்படுத்தும் வகையில் இலக்கு எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் எல்.எம்.இ.எஸ் நிறுவனத்தைச் சோ்ந்த சிறப்பு பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்களின் மேற்படிப்பு தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனா். நிகழ்வில் டிசிஎஸ் மென்பொருள் நிறுவனத்தில், பயிற்சி பெற்ற இஜிஎஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லூரி தலைவா் ஜோதிமணி அம்மாள், செயலா் செந்தில்குமாா், இணைச் செயலா் சங்கா் கணேஷ், நிா்வாக தலைவா் மணிகண்ட குமரன், முதன்மை செயல் அலுவலா் சந்திரசேகா், கல்விசாா் இயக்குநா் மோகன், கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் மாணவா்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com