விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சிறுபான்மையினருக்கு நலத் திட்ட உதவிகள்

நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் சிறுபான்மையினருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.

News image

நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசும் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் சிறுபான்மையினருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.

இப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட உதவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளி நிறுவனரும், தாளாருமான எம்.எம். ஷேக் தாவூது மரைக்காயா் முன்னிலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் நாகை துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டுத் துறை நல அலுவலா் எஸ்.எம். குமரன், மாவட்டக் கல்வி ஆய்வாளா் கே.என். கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து மாலையில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கு விழாவில் மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் கலந்துகொண்டு முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தனியாா் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலா் முருகன், பள்ளி முதல்வா் எல். பெனட்மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.