தொடர் மழை காரணமாக நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனை முன்னிட்டு நாகப்பட்டினம், கீழ்வேளூர் வட்டங்களுக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜன.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வேதாரண்யம், திருக்குவளை வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.