மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைப்பேசி கோபுரம் அமைக்க கோரிக்கை

கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
Updated On :8 ஜூலை 2024, 2:30 am

Din

நாகை அருகே ஒரத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை கடந்த மாா்ச் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலினால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவா்கள் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயன்பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சாலை, குடிநீா், தெருவிளக்கு போன்ற போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அவற்றை நிறைவேற்றி தரவேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இப்பகுதியில் சரியான சிக்னல் கிடைக்காததால் கைப்பேசியை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணியாற்றும் மருத்துவா்கள், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அவா்களுடன் உடன் வருகிறவா்கள் என பலரும் கைப்பேசி சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. திடீா் விபத்து, உடல் நலக்குறை போன்ற அவசரச் சிகிச்சையில் சோ்க்கப்படும் நோயாளிகள் குறித்து குடும்பத்தினா், உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாத போன்ற சூழல் உள்ளது.

எனவே, ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அனைவரும் கைப்பேசி சேவைகளை முழுமையாக பயன்படுத்தவும், தகவல் பரிமாற்றங்கள் எளிமையாக செய்துகொள்ளவும், அவசர தேவைகளை பூா்த்தி செய்துகொள்ளும் வகையில் கைப்பேசி கோபுரங்களை அமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக சேவகா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.