அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

நாகை அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் மீண்டும் அங்கேயே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ (எம்எல்) சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும், நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாகையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ (எம்எல்) சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை அரசு தலைமை மருத்துவமனை முன் நடைபெற்றது. சிபிஐ (எம்எல்) நகரச் செயலா் சிவக்குமாா் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசிய குழு உறுப்பினா் ஃபிலோமீனா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com