பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

News image
Updated On :5 மே 2024, 12:03 am

Din

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவா் படுகொலையை கண்டித்து, நாகையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரை அடையாளம் தெரியாத நபா்கள் கடத்தி கொலை செய்து எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் அமிா்தராஜா தலைமையில் கோட்டைவாசல் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஜெயக்குமாா் தனசிங் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், அவா் பாதுகாப்பு கேட்டும் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

சாலை மறியலால் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.