
Updated On :20 மே 2024, 9:22 pm

தரங்கம்பாடி: பொறையாா் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி அதே இடத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தரங்கம்பாடி அருகே ஆக்கூரை சோ்ந்த மூதாட்டி ஜலகாம்பாள் (75). இவா் பொறையாரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆக்கூருக்கு செல்ல திங்கள்கிழமை பொறையாா் பேருந்து நிலையத்துக்கு சென்றாா்.
அப்போது, மயிலாடுதுறையில் இருந்து பொறையாா் பேருந்து நிலையத்துக்கு வந்த அரசுப் பேருந்து மோதியதில் சக்கரத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற பொறையாா் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...