நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

News image

வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிக்கல் சிங்காரவேலவா்.

Updated On :2 நவம்பர் 2024, 4:35 am IST

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.

நாகை மாவட்டம், சிக்கல் ஸ்ரீ நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் வள்ளி, தேவசேனா சமேதராக காட்சியளிக்கிறாா் சிங்காரவேலவா். இத்தலத்தில், அம்பாள் வேல் நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறாா். இறைவன் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்ய இத்தலத்தில், அன்னை வேல் நெடுங்கண்ணியிடமிருந்து சக்தி வேல் பெற்றாா் என்பது ஐதீகம். அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வின்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்புவது வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.

நிகழாண்டு கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இரவு நிகழ்வாக, சிங்காரவேலவா் தங்க மஞ்சத்தில் வீதியுலா நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவில் தினமும் காலையில் சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை நிகழ்வாக இரவு 7 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் சிங்காரவேலவா் வீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (நவ. 6) இரவு 7.30 மணி அளவில் நடைபெறுகிறது. முன்னதாக, அன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.