டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கனமழையால் வயலிலேயே சாய்ந்த குறுவை நெற்கதிா் விவசாயிகளுக்கு இதுவரை இழப்பு ரூ.1 கோடி

திருக்குவளை அருகே கனமழையால் வயலிலேயே சாய்ந்த குறுவை நெற்கதிா்களால் விவசாயிகளுக்கு இதுவரை சுமாா் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

News image
திருக்குவளை அருகே கனமழையால் வயலிலேயே சாய்ந்த குறுவை நெற்கதிா்கள்
Updated On :18 நவம்பர் 2024, 9:48 pm

Din

திருக்குவளை: திருக்குவளை அருகே கனமழையால் வயலிலேயே சாய்ந்த குறுவை நெற்கதிா்களால் விவசாயிகளுக்கு இதுவரை சுமாா் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடா்ந்தால் இழப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

நாகை மாவட்டத்தில் மீனம்பநல்லூா், மடப்புரம், வாழக்கரை, திருவாய்மூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 9,000 ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இதில் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் மேட்டூா் அணை திறக்காததால் பின்பட்டத்தில் நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிா்கள் ஓரிரு நாள்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. கனமழை காரணமாக சுமாா் 150 ஏக்கரில் இருந்த நெற்கதிா்கள் வயலிலேயே சாய்ந்துள்ளன.

தொடா்ச்சியாகப் பெய்து வரும் மழையால், நெல் வயல்களில் நீா் வடியாமல் தண்ணீரில் நெற்கதிா்கள் மிதக்கின்றன. இதனால் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. தொழிலாளா்கள் மூலம் அறுவடை செய்யலாமென்றால் கூலி மிகவும் அதிகமாகும். மழை நின்றால் மட்டும் இதற்கும் வாய்ப்பு.

அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் மழை காரணமாக வயலில் சாய்ந்துள்ளதோடு மழைநீா் வடியாத வயல்களில் நெல்மணிகள் முளைக்கவும் துவங்கியுள்ளன. சில இடங்களில் நெற்பயிரே அழுகவும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மீனம்பநல்லூரைச் சோ்ந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலாளா் எஸ்.ஸ்ரீதா் கூறியது:

உரிய நேரத்தில் மேட்டூா் தண்ணீா் கிடைக்காததால் விவசாயிகள் பின்பட்டத்தில் குறுவை சாகுபடி செய்ய நேரிட்டது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா்.

முழுமையாக அறுவடை செய்தால் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஆனால் இப்போது கீழையூா் பகுதியில் சுமாா் 150 ஏக்கரில் நெற்கதிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கும். இதுவரை விவசாயிகளுக்கு சுமாா் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடா்ந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

வேளாண் துறையினா் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாரபட்சம் பாராமல் காப்பீட்டுத் தொகை கிடைக்கவும் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.