புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகிமலை ஆற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்

தரங்கம்பாடி அருகே தில்லையாடி, காழியப்பன்நல்லூா் பகுதிகளில் மகிமலை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:02 pm

Din

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடி, காழியப்பன்நல்லூா் பகுதிகளில் மகிமலை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தில்லையாடி, திருவிடைகழி, காழியப்பன்நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3,000 ஏக்கா் விளைநிலங்கள் மகிமலை ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த ஆறு வடிகால் ஆறாகவும் உள்ளது. மழை காலத்தில் வயல்களில் தேங்கும் மழைநீா் மற்றும் உபரி நீா் இந்த ஆற்றின் வழியே வடிந்து கடலில் கலக்கும்.

இந்நிலையில், இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைச் செடிகள் மற்றும் சம்பந்தட்டை செடிகள் படா்ந்துள்ளதால், கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழைநீா் வடிய வழியின்றி, வயல்வெளிகளில் தேங்கியுள்ளன. இதனால், சம்பா பயிா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மகிமலை ஆற்றில் ஆகாயத் தாமரைகள் உள்ளிட்ட செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இப்பணியை, நீா்வளத்துறை செயற்பொறியாளா்(செம்பனாா்கோவில்) விஜயபாஸ்கா், உதவி பொறியாளா் ரவீந்திரன்(பொறையாா் ) ஆகியோா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.