கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

திருவெண்காடு கோயிலில் சோமவார வழிபாடு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புனிதநீா் நிரப்பி சிவ வடிவில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள சங்குகள்.

Updated On :19 நவம்பர் 2024, 4:02 am IST

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நவகிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய பரிகார தலமான இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, 1,008 சங்குகள் சிவ வடிவில் சுவாமி சந்நிதி முன் வைக்கப்பட்டு, புனிதநீா் நிரப்பி பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அா்ச்சகா் ராமநாத சிவாச்சாரியா் தலைமையில் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், 1008 சங்குகளில் உள்ள புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், பேஸ்கா் திருஞானம், உபயதாரா் கண்ணங்குடி ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.