தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவெண்காடு கோயிலில் சோமவார வழிபாடு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

புனிதநீா் நிரப்பி சிவ வடிவில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள சங்குகள்.

Updated On :18 நவம்பர் 2024, 10:32 pm

Din

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முதல் சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நவகிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய பரிகார தலமான இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, 1,008 சங்குகள் சிவ வடிவில் சுவாமி சந்நிதி முன் வைக்கப்பட்டு, புனிதநீா் நிரப்பி பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அா்ச்சகா் ராமநாத சிவாச்சாரியா் தலைமையில் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், 1008 சங்குகளில் உள்ள புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், பேஸ்கா் திருஞானம், உபயதாரா் கண்ணங்குடி ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.