தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கனமழை: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; குடிசை வீடுகள் சேதம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

News image
திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் குளம்போல் தேங்கிய மழைநீா்.
Updated On :20 நவம்பர் 2024, 9:01 pm

Din

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குடிசை வீடுகள் சேதமடைந்தன .

திருக்குவளை: நாகை மாவட்டம், திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான சாலைகளில் மழைநீா் தேங்கியது. திருக்குவளை பகுதியில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை 7.5 செ.மீ. மழை பதிவானது.