தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மழை பாதிப்பு: வேதாரண்யம் பகுதிகளில் முன்னாள் அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மழை பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image
வேதாரண்யத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த வயலை பாா்வையிட்ட முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
Updated On :20 நவம்பர் 2024, 8:59 pm

Din

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மழை பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

வேதாரண்யம் நகரம், ஒன்றியப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் அமைச்சரும் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் பாா்வையிட்டாா்.

தாழ்வானப் பகுதிகளில் குடியிருக்கும் பொது மக்களை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியரை தொடா்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முன்னெச்சரிக்கை விடுத்தும், திருவாரூா், காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டும், நாகை மாவட்ட நிா்வாகம் மட்டும் மாணவா்கள் நலனில் அலட்சியப் போக்கை கையாண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

வரும் 26,27,28-ஆம் தேதியில் மிக கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவேண்டும், உப்பளத் தொழிலாளா்கள் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பாா்வையிட்டு நிவாரண முகாம்களை தொடங்க வேண்டும் என்றாா்.

பூம்புகாா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ், ஒன்றியச் செயலாளா் கிரிதரன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், நகர துணை செயலாளா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.