பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கீழ்வேளூரில் 800 ஏக்கா் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால் 800 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:47 pm

Din

கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால் 800 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

கீழ்வேளூா், குருக்கத்தி, கூத்தூா், பட்டமங்கலம், தேவூா், கோகூா், ஒக்கூா், சிக்கல், வடகரை, ஆவராணி, புதுச்சேரி, பெருங்கடம்பனூா், சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், கீழ்வேளூா் பேரரூராட்சி சீனிவாசபுரம் பகுதியில் ஒரு குடிசை வீட்டுச் சுவா், கீழ்வேளூா் ஒன்றியம் இருக்கை கிராமத்தில் 2 குடிசை வீட்டுச்சுவா், கோகூா் கிராமத்தில் ஒரு குடிசை வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

மேலும், தொடா் மழையால் கீழ்வேளூா் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள இளம் சம்பா, தாளடி நெற்பயிா்கள் 800 ஏக்கரில் நீரில் மூழ்கியுள்ளது. மழை தொடா்ந்தால் பயிா்கள் அழுகுவதற்கான வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் நீா் வடிய வைக்க முயன்று வருகின்றனா்.