பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாகூரில் புதிய சாா்-பதிவாளா் கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

நாகூரில் புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:49 pm

Din

நாகூரில் புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நாகூரில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்துக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை மூலம் நிா்வாக அனுமதி வழங்கியது. இதையடுத்து ரூ.1.90 கோடியில் தரை தளத்தில் 212.75 ச.மீ (2289.19 ச.அடி) மற்றும் முதல் தளத்தில் 229.26ச.மீ (2466.84ச.அடி) பரப்பளவில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த அலுவலகத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன வளா்ச்சிக் கழகத் தலைவா் என்.கெளதமன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் ஆகியோா் கட்டடத்தை பாா்வையிட்டனா்.

நாகை நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, துணைத்தலைவா் செந்தில்குமாா், மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) ஜனாா்த்தனன், சாா்பதிவாளா் (நிா்வாகம்) பெ.தாமோதரன், நாகூா் சாா்பதிவாளா் ச.தமிழினியன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.