தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நிவாரண முகாமில் எம்எல்ஏ ஆய்வு

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சட்டப்பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் புதன்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image
அம்பல் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொது மக்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாா்வையிட்டாா்
Updated On :27 நவம்பர் 2024, 9:33 pm

Din

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சட்டப்பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் புதன்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி காமராஜா் நகா் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷாநவாஸ், முகாமுக்கு சென்று பாா்வையிட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். மேலும் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, பரமநல்லூா் அரசலாற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

உதவி திட்ட அலுவலா் மரியதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், வட்டார ஆத்மா குழு தலைவா் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.