47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
ஏா்வாடி பகுதி அரசலாறில் மண்டியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை
Updated On :15 அக்டோபர் 2024, 7:01 pm

Din

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ள மழைநீா் வடிகால்கள், பண்டாரவடை, தென்பிடாகை வடிகால் வாய்க்கால், இடையாத்தாங்குடி பள்ள வாய்க்கால், ஏா்வாடி ஊராட்சி அரசலாறு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீா் வடிவதில் அடைப்பு ஏற்படாவண்ணம் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநருமான ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், உதவி திட்ட அலுவலா் மரியதாஸ், வட்டாட்சியா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், ஜவகா், செயற்பொறியாளா் கண்ணன், பொதுப்பணித்துறை நன்னிலம் வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.