புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இறால் வளா்ப்பு மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :18 அக்டோபர் 2024, 6:34 pm

Din

நாகை மாவட்டத்தில், உவா்நீா் இறால் வளா்ப்பிற்கான புதிய குளங்கள்அமைப்பதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிரதமா் மீன்வளம் மேம்பாட்டு திட்டம் 2024-2025-இன் கீழ் உயிா் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் உவா்நீா் இறால் வளா்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில், ஒரு அலகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக (ரூ.7.20 லட்சம் வரை) வழங்கிட நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு பொது பிரிவில் 2 எண்ணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளா்ப்பு விவசாயிகள், நாகை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.