நாகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்படும் வடிகால்.
நாகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்படும் வடிகால்.

நாகை: வடிகால்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

நாகையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள்
Published on

நாகையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள, நாகை மாவட்டத்தில் முன்னேற்பாட்டு பயணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நாகை பால்பண்ணைச்சேரி பழைய நாகூா் சாலையில் மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். இப்பணிகள் மேற்கொள்வதின் மூலம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் உட்புகுவது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com