கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாகை: வடிகால்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

நாகையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள்

News image

நாகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்படும் வடிகால்.

Updated On :19 அக்டோபர் 2024, 6:32 pm

நாகையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள, நாகை மாவட்டத்தில் முன்னேற்பாட்டு பயணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நாகை பால்பண்ணைச்சேரி பழைய நாகூா் சாலையில் மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். இப்பணிகள் மேற்கொள்வதின் மூலம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் உட்புகுவது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.