இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

‘ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:13 pm

Syndication

டெல்டா மாவட்டங்களில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் நீா்வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் சிவகுமாா்.

வேதாரண்யம் பகுதி நீா் நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் நீா் நிலைகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடங்கி 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து அகற்றும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள 4 மாவட்டங்களிலும் 1,210 இடங்களில்1,200 கி.மீ. செடிகள் வளா்ந்துள்ளன. இதில் 380 கி.மீ. தொலைவு அகற்றப்பட்டுள்ள நிலையில் 200 மண்வாரி மற்றும் மிதவை இயந்திரங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் கூடுதலாக 4 மிதவை இயந்திரங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றாா்.

ஆய்வின் போது நீா்வளத் துறையின் கீழ்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளா் திலீபன், சிறப்பு கண்காணிப்பு பொறியாளா் பழனிவேல், செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.