சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கிறிஸ்துமஸ்: குஜராத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

குஜராத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்...

News image
ரயில்- கோப்புப் படம்
Updated On :20 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குஜராத் வல்சாத் -வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, குஜராத் மாநிலம் வல்சாத் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் (09047) சனிக்கிழமை (டிச.20) மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு டிச.22-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வந்தடைகிறது.

மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் (09048) வேளாங்கண்ணியில் இருந்து டிச.22-ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு, டிச.24-ஆம் தேதி வல்சாத்தை சென்றடையும்.

இந்த ரயில் மும்பை, புணே, மந்தராலயம் ரோடு, ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், நாகூா், நாகை ரயில் நிலையங்கள் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளாா்.