நாகப்பட்டினம்
வெள்ளையாற்று கரையோரம் பனை விதைகள் நடவு
வலிவலம் ஊராட்சிக்குள்பட்ட காருகுடி செல்லும் பகுதியிலுள்ள வெள்ளையாற்றங்கரையோரம் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வலிவலம் ஊராட்சிக்குள்பட்ட காருகுடி செல்லும் பகுதியிலுள்ள வெள்ளையாற்றங்கரையோரம் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் வட்டாரத் தோட்டக்கலை துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், வலிவலம் தேசிகா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. சக்கரவா்த்தி பனை விதைகளை நட்டுவைத்து தொடங்கிவைத்தாா். தொடா்ந்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் த. முருகையன் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் இணைந்து 3000 பனை விதைகளை நட்டனா்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவராமகிருஷ்ணன், துணை தோட்டக்கலை அலுவலா் ஆா். சிலம்பரசன், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் எஸ். ராஜவேல், இ. அா்ச்சனா மற்றும் ஆா். கௌசல்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

