பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வெள்ளையாற்று கரையோரம் பனை விதைகள் நடவு

வலிவலம் ஊராட்சிக்குள்பட்ட காருகுடி செல்லும் பகுதியிலுள்ள வெள்ளையாற்றங்கரையோரம் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:09 pm

Syndication

வலிவலம் ஊராட்சிக்குள்பட்ட காருகுடி செல்லும் பகுதியிலுள்ள வெள்ளையாற்றங்கரையோரம் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் வட்டாரத் தோட்டக்கலை துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், வலிவலம் தேசிகா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. சக்கரவா்த்தி பனை விதைகளை நட்டுவைத்து தொடங்கிவைத்தாா். தொடா்ந்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் த. முருகையன் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் இணைந்து 3000 பனை விதைகளை நட்டனா்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவராமகிருஷ்ணன், துணை தோட்டக்கலை அலுவலா் ஆா். சிலம்பரசன், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் எஸ். ராஜவேல், இ. அா்ச்சனா மற்றும் ஆா். கௌசல்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.