அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சகோதரி வீட்டை ஜேசிபி மூலம் இடித்த சகோதரா்

வேதாரண்யம் அருகே சகோதரி வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்ததாக சகோதரா் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:45 pm

Syndication

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே சகோதரி வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்ததாக சகோதரா் மீது ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் அருகே உள்ள செண்பகராயநல்லூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த சிங்காரவேல் மனைவி முத்துலட்சுமி. இவா், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த மனு:

நான் மேலக்காடு பகுதியில், எனது தந்தை கணேசனுக்குச் சொந்தமான இடத்தில், வீடுகட்டி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தேன். எனது மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், நான் மட்டும் தனியாக அந்த வீட்டில் வசித்தேன்.

இந்நிலையில், எனது சகோதரா் மாசிலாமணி, கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி நான் வேலைக்குச் சென்றிருந்தபோது, எனது வீட்டை ஜேசிபி மூலம் இடித்து விட்டாா். அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில், நான் அங்கு செல்லவிடாமல் தடுத்து வருகிறாா்.

இதுதொடா்பாக, கரியாப்பட்டினம் காவல்நிலையம் மற்றும் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது நான் அப்பகுதியில் தெரிந்தவா்கள் வீட்டில் தங்கி வருகிறேன்.

எனவே, எனது சகோதரா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதே இடத்தில் நான் மீண்டும் வீடு கட்டி வசிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.