மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:31 pm

Syndication

நெடுஞ்சாலைத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி விண்ணப்பித்த 1000 பேரின் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் துரைப்பாண்டி, மாவட்டச் செயலா் சத்தியசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

நிறைவில் கண்காணிப்பாளா் செல்வராஜ் நன்றி கூறினாா்.