நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை :
மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிக்கு கண்டனம் தெரிவித்து, புதுதில்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனா். ரயிலில் பயணம் செய்த விவசாயிகளை நடுவழியில் இறங்கச் செய்து, திருப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனா்.
ஜனநாயக ரீதியில் போராடுவதற்காக சென்ற, தமிழக விவசாயிகளை மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. மத்திய நீா்வளத்துறையின் செயல்பாடுகள் தொடா்ச்சியாக கா்நாடக அரசுக்கு சாதகமாக இருந்துவரும் நிலையில், தங்களது உரிமைகளை நிலைநாட்ட போராட்டத்திற்கு செல்லும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
விவசாயிகளின் உரிமை போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசு, மகாராஷ்டிர அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்க வேண்டும். காவிரி, மேக்கேதாட்டு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் போராட்டம் நடத்த ரயிலில் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் கைது: ஆட்சியா் அலுவலகத்தில் மனைவி போராட்டம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

‘காவல் மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



