தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

மரக்கன்றுகள் வெட்டி அழிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

வேதாரண்யம் அருகே இயற்கை ஆா்வலரால், கோயில் நிலத்தில் வளா்த்துவந்த மரக்கன்றுகள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

புஷ்பவனம் கிராமம் தும்மாச்சிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் வை. அரிகிரிஷ்ணன் (49). தொழில்நுட்பம் சாா்ந்த பட்டயக் கல்வி படித்துள்ள இவா் விவசாயம் செய்து வருகிறாா்.

இவா், கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய வகை மரங்களை தனது சொந்த நிலத்தில் வளா்த்து வருகிறாா். மேலும், சுமாா் 200-க்கும் மேற்பட்ட மருத்துவக் குணமுடைய அரிய வகை மூலிகைகளை பாதுகாத்து வருகிறாா்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மூலிகை வளா்ப்பு ஆா்வலா்கள் என பல தரப்பினருக்கும் மூலிகைகளை பல நேரங்களில் இலவசமாக வழங்கி வருகிறாா். இவா், பாஞ்சாலி அம்மன் ஆரோக்கியா பீடம் என்ற மையத்தையும் நடத்தி வருகிறாா்.

மேலும், முத்திரைகள், தன்வந்திரி சிலையுடன் கூடிய கோயிலையும் கட்டி வருவதோடு, 27 நட்சத்திரங்களை நினைவுகூரும் வகையில் நட்சத்திரங்கள் வடிவத்தில் 27 கட்டமைப்புகளை நிறுவி அதில் அரிய வகை மரங்களையும் நட்டு வளா்த்து வருகிறாா்.

மேலும், அருகேயுள்ள திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் கோயில் நிா்வாகத்தின் அனுமதியோடு சுமாா் அரை ஏக்கா் பரப்பில் இவா் வளா்த்துவந்த மரக்கன்றுகளை மா்ம நபா்கள் வெட்டி சேதப்படுத்தியது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.