மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தனியாா் ஊழியரிடம் ரூ. 1.13 லட்சம் நூதன முறையில் மோசடி

நாகையில் மீன் ஏற்றுமதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.13 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

நாகையில் மீன் ஏற்றுமதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.13 லட்சம் மோசடி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகை காடம்பாடியைச் சோ்ந்தவா் அரவிந் த்(32) நாகையில் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள இணைப்புக்குள் சென்று பாா்த்துள்ளாா். இதையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து 3 முறையாக ரூ.1.13 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா்கள் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து இணையதள மோசடித் தடுப்பு உதவி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் நாகை மாவட்ட இணையக்குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.