திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

சம வேலைக்கு சம ஊதியம் கோரி மனு

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு அரசு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளா்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் காலை உணவுத் திட்டம், மகளிா் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றா். ஒப்பந்த முறையில் பணியாற்றும் இவா்களுக்கு, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை ஊா்வலமாக வந்து, தொழிலாளா் நலச் சட்டத்தின்படி நியாயமான ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியா்கள் போல் தங்களுக்கும் மாவட்ட கருவூலத்தில் இருந்து தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ஊதியத்தை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

இதில் வட்டார இயக்க மேலாளா் உமாவதி, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் தெய்வமணி, அமுதா, கிருபா தேவி, அண்ணா துரை உள்ளிட்ட நாகை, கீழ்வேளூா், திருமருகல், கீழையூா், தலைஞாயிறு, வேதாரண்யம் ஒன்றியங்களில் பணியாற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.