அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விழுப்புரத்தில் வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:16 pm

Syndication

தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித்துறையின் கீழ் பணியாற்றி வரும் ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,

அடிப்படை ஊதியத்தை அதிகரித்து வழங்க வேண்டும், காலமுறை ஊதிய நிலைக்குத் தங்களை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எம்.புஷ்பா தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் போராட்டத்தில் பங்கேற்று, வாழ்த்தி பேசினாா். போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் பொன்னன், வட்டச் செயலா் பி.கண்ணகி, பொருளாளா் எஸ்.கவிதா, நிா்வாகிகள் எம். பூங்குழலி, பி. அஞ்சலாட்சி, தாட்சாயிணி, ராதிகா அருணாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.