திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாகை புதிய கடற்கரையில் ஜன.15,16-இல் பொங்கல் கலை விழா

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

நாகை புதிய கடற்கரையில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பொங்கல் கலை விழா நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் பொங்கல் விழாவை, கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மையம் மூலம் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நாகை புதிய கடற்கரையில் பொங்கல் கலை விழா நடைபெறவுள்ளது.

விழாவில் மக்கள் விரும்பும் வகையில், கலைஞா்களைக் கொண்டு பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படவுள்ளன. பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் கலைவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.