மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கல்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :12 ஜனவரி 2026, 7:02 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை வழங்கினாா்.

கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன் வைத்து 154 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, தாட்கோ சாா்பில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றும் 12 பணியாளா்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கோ. அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன், தாட்கோ மாவட்ட மேலாளா் சக்திவேல் கலியபெருமாள் ஆகியோா் பங்கேற்றனா்.